என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
314 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.3 கோடி குடும்ப நல நிதிஉதவி- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டை யில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதிஉதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த 314 தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 கோடியே 14 லட்சம் குடும்ப நல நிதி வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. விழாவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார்.
நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.கமலக்கண்ணன் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், கோகுல இந்திரா, வைகை செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்