search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அதிமுக கொண்டு வந்த வளர்ச்சி திட்டப்பணிகளை திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன
    X

    அதிமுக கொண்டு வந்த வளர்ச்சி திட்டப்பணிகளை திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளன

    • அதி.மு.க. ஆட்சியில் தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் பெற்றோம்.
    • விவசாயிகளுக்கு மும்முணை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டது.

    அரூர்:

    தருமபுரி மாவட்ட கொங்கு இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்துறை பயிற்சி அளிக்கும் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம் அரூரில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய பண்பாலயத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். அப்போது இருந்த எதிர்கட்சித் தலைவர்கள் என்னை ஏளனப்படுத்தி பேசினார்கள். 6 மாதங்கள் கூட அதி.மு.க. ஆட்சி நீடிக்காது என்றனர். ஆனால் எனது தலைமையில் நான்கு வருடம், 2 மாதங்கள் சிறந்த ஆட்சியை நடத்தினோம்.

    தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், தருமபுரி உள்பட 6 சட்டக் கல்லூரிகளை தொடங்கினோம். அதேபோல், நீட் தேர்வில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் அதி.மு.க. தலைமையிலான ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்துள்ளது. இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதிகளை வழங்கினர்.


    ஆனால், தி.மு.க. 2 வருடங்கள், 8 மாத காலம் ஆட்சியில் இருந்தும் எந்த சிறந்த திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. நீட் விலக்குகோரி தி.மு.க.வினர் லட்சகணக்கானோரிடம் கையொப்பம் பெற்றனர். நீட் விலக்கு கோரி கையொப்பம் பெற்ற கையெழுத்து பிரதிகள் சேலத்தில் அண்மையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் சிதறி கிடந்தது தெரியவந்தது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதி.மு.க. ஆட்சியில் தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் பெற்றோம். அதி.மு.க. ஆட்சியில் தடை இல்லா மின்சாரம் தந்தோம். விவசாயிகளுக்கு மும்முணை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டது.

    பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை கீழ் வரும் 40 ஆயிரம் ஏரிகளில் குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டு தூர்வாரப்பட்டு அதில் கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ள வகை செய்தோம்.

    தருமபுரி மாவட்டத்தில் அதி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தி.மு.க. ஆட்சியில் கே.ஈச்சம்பாடி அணைக் கட்டு நீரேற்றும் திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்கள் கிடப்பில் போடப் பட்டுள்ளன

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×