search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார்

    • 2-வது கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.
    • எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இதே போல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் 2 கட்டமாக 5 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி நாளை (15-ந்தேதி) தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5 மணியளவில் வீரப்பன் சத்திரம் பகுதி, பெரியார் நகர் பகுதிகளில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து வீரப்பம்பாளையம், வெட்டுகாட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகில், கலெக்டர் அலுவலகம், சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, மணிக்கூண்டு ஆகிய இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் வீரப்பன்சத்திரம் பகுதியில் தனது முதல் நாள் பிரசாரத்தை முடித்து கொள்கிறார்.

    தொடர்ந்து 16, 17-ந்தேதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். பின்னர் 2-வது கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் 24, 25-ந்தேதிகளில் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×