என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்குமா? தேர்தல் ஆணையம் இன்று இறுதி முடிவு
- அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரும் மனு மீது தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
- தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் ஆலோசனை நடத்தலாம் என்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பெங்களூரு புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே தலைமை பதவியை பிடிக்கும் போட்டியில் மோதல் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. அதுமட்டுமின்றி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று கூறி இருந்தது.
இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று கட்சியை வழி நடத்தி வருகிறார். அ.தி.மு.க. தலைமைக் கழகம் மற்றும் இரட்டை இலை சின்னம், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளதால் அவரது செல்வாக்கு கட்சியில் ஓங்கி விட்டது.
இந்த நிலையில் ஜூலை 11-ந்தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட தீர்மானங்களை அ.தி.மு.க. வின் சட்ட விதிகள் திருத்தமாக அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி சார்பில் வலியுறுத்தி மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதன் மீது தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது.
இப்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்து விட்டனர்.
இந்த சூழலில் கர்நாடக மாநில தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற சிக்கல் உருவாகி உள்ளது.
எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரும் மனு மீது தேர்தல் ஆணையம் விரைவாக முடிவெடுக்க உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி குரு சந்திரா விசாரித்தார். அப்போது இந்த பிரச்சினையில் முடிவெடுக்க தேர்தல் ஆணையம் தரப்பில் 10 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், பொதுச்செயலாளர் பதவி தொடர்பான மூல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று வாதிட்டனர்.
முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் இதுகுறித்து ஆலோசனை நடத்தலாம் என்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பெங்களூரு புகழேந்தி, தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் மனு தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் இன்று இறுதி முடிவெடுக்க உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் இதற்கான ஆலோசனை இன்று நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்