search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு நிதி: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
    X

    மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு நிதி: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

    • மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்திருப்பது பெரும் பயனுள்ளது. பாராட்டுக்குரியது.
    • இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்க ஒப்புதல் அளித்திருப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அமைச்சரவை சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ. 63,246 கோடி நிதி அளிக்க ஒப்புதல் அளித்து, இதில் மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளித்திருப்பது பெரும் பயனுள்ளது. பாராட்டுக்குரியது.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசின் பங்களிப்பு சென்னையில் போக்குவரத்தை மேற்கொள்ளும் பயணிகளுக்கு பேரூதவியாக அமைகிறது.

    பிரதமர் தமிழக மக்களின் நலன், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தக்க நேரத்திலே மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி அளிக்க ஒப்புதல் அளித்திருப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×