search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    GK Vasan
    X

    தொடக்க கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

    • ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கைது செய்தது முறையல்ல.
    • தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் உள்ளிட்ட 12 சங்கங்களின் பொருளாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, 3 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நேரத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்காக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போராடி வருகின்றனர். ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை கைது செய்தது முறையல்ல.

    இந்நிலையில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் உள்ளிட்ட 12 சங்கங்களின் பொருளாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு கண்டு ஆசிரியர்களின் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×