search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது
    X

    22 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது

    • 22 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,735-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.4767-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    கடந்த 21-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.37,040-க்கு விற்கப்பட்டது. மறுநாளில் இருந்து விலை உயர்ந்து வருகிறது. 22-ந்தேதி பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37,440-க்கு விற்கப்பட்டது. மறுநாள் 23-ந்தேதி அது ரூ.37,568 ஆக உயர்ந்தது. 24-ந்தேதியும் அதே விலையில் நீடித்தது.

    25-ந்தேதி மீண்டும் உயர்ந்து ரூ.37,760-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.37,824 ஆனது. நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து பவுன் ரூ.37,880-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் இன்று பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.38,136-க்கு விற்பனையாகிறது. கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் ரூ.38,440-க்கு விற்கப்பட்டது. மறுநாள் அது ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது.

    இந்த நிலையில் 22 நாட்களுக்கு பிறகு இன்று தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,735-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.4767-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.61.20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.61,200-க்கு விற்கப்படுகிறது.

    Next Story
    ×