search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு வழக்குகள் கடந்து வந்த பாதை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஜல்லிக்கட்டு வழக்குகள் கடந்து வந்த பாதை

    • 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    • 2014-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் கடந்து வந்த பாதை:-

    * 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    * 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜல்லிக்கட்டு நடத்த வரைமுறைகளை நிர்ணயிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் பல்வேறு நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    * 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேனகா காந்தி தொடர்ந்த வழக்கில், ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    * 2009-ம் ஆண்டில் அப்போதைய தமிழக அரசு அளித்த உறுதி மொழி மற்றும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒழுங்கு முறை சட்டத்தை ஏற்று, ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தற்காலிக அனுமதி வழங்கியது.

    * 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கூடுதல் நிபந்தனைகள் மற்றும் புதிய வரைமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    * 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விலங்குகளை மையமாக வைத்து நடைபெறும் விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    * 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் வித்தை காட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை மாடும் சேர்க்கப்பட்டது. இது ஜல்லிக்கட்டுக்கான நேரடி தடையாக இல்லாத போதும், மறைமுக தடையாக அமைந்தது.

    * 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

    * 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது. அதே மாதம் 2013-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    * 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை எனவும், போட்டிகளை அந்த அந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    * 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கக் கோரி விலங்குகள் நலவாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    * 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    * 2014-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    * 2015-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த தீர்ப்பை திரும்பப் பெறக் கோரிய தமிழக அரசின் மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    * 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபை ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான அரசாணைக்கு பதிலாக மசோதாவை நிறைவேற்றியது. "விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் 2017" குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதில், "விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

    இதை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் காம்பாஷன் அன்லிமிடெட் பிளஸ் ஆக்ஷன் ஆகியவை மனு தாக்கல் செய்தது.

    * 2018-ம் ஆண்டில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஆர்.எப் நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 2017 ஐ எதிர்த்த வழக்குகளை 5 பேர் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கூறியது.

    * 2023 மே 18: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை இல்லை.

    Next Story
    ×