என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கிருமாம்பாக்கம் அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 20 பேர் படுகாயம்
- ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- சாலையில் ஓரமாக பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
பாகூர்:
கடலூரில் இருந்து கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், ரெட்டி சாவடிக்கான ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.
இந்த ஆட்டோக்கள் பெரும்பாலும் முறையாக அரசு அனுமதி பெறாமல் வாய்மொழி உத்தரவில் சுமார் 100 வண்டிகள் இயக்கப்படுகிறது.
அதுபோல இன்று காலை கடலூரில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று கிருமாம்பாக்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்னியகோயில் 4 முனை சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையை பைக்கில் கடக்க முயன்ற குழந்தையுடன் வந்த பெண் மீது மோதியது.
மேலும் ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் வந்தவர்களும் சாலையைக் கடந்த பைக்கில் வந்தவர்களும் காயமடைந்தனர். அப்போது சாலையில் ஓரமாக பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
விபத்தில் கடலூரைச் சேர்ந்த செவிலியர் சுதா(41), அருள்(42), நாராயணன்(50), மற்றும் குழந்தை கல்லூரி மாணவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 6 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கு ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் முறையாக பராமரிக்கபடாததும், போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் முக்கிய சந்திப்புக்களில் பணியில் ஈடுபடுவது கிடையாது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்