search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து- ஐகோர்ட் தீர்ப்பு
    X

    அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து- ஐகோர்ட் தீர்ப்பு

    • 20 கோடி ரூபாய் கடன்பெற்ற கண்ணம்மாள் அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
    • தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அனைவரும் மேல்முறையீடு செய்தனர்.

    சென்னை, செப்.28-

    2014-2019ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்த கே.என்.ராமச் சந்திரன், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். அந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமசந்திரன் விண்ணப்பித்துள்ளார்.

    அப்போது, விண்ணப் பத்தை பரிசீலிக்க, தனக்கும் குடும்பத்தாருக்கும் அமெ ரிக்கா சென்று வர விமான கட்டணமாக 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை பெற்ற மேலாளர் தியாகராஜன், 20 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக, வங்கி மேலாளர் தியாகராஜன், கல்லூரி தலைவர் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிர்வா கியாக இருந்த ராமச் சந்திரன் உள்ளிட்டோர் மீது 2015-ம் ஆண்டில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

    இந்த வழக்கை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு விசாரித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.

    அதில், அ.தி.மு.க. முன் னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1 கோடியே 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக் கப்பட்டது.

    விமான செலவை லஞ்சமாக பெற்று கடன் வழங்கிய சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 13 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது.

    20 கோடி ரூபாய் கடன்பெற்ற கண்ணம்மாள் அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கட் டுள்ளது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அனைவரும் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித் தார். முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் சார்பில் வக்கீல் எம்.எப்.சபானா ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "லண்டனில் உள்ள மெர்லின் சொகுசு குடியி ருப்பில் வங்கி அதிகாரி தங்கினார். இதற்கு பெருந்தொகை செலுத் தப்பட்டுள்ளது என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டி உள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. தூதரகம் மூலம் சி.பி.ஐ. அதிகாரிகள் விவரம் கேட்டு அனுப்பிய கடிதத்திற்கு சரியான பதிலும் லண்டன் குடியிருப்பில் இருந்து வரவில்லை.எனவே அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன், வங்கி அதிகாரி தியாகராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நம்பும் படியா கவும், ஏற்கும் படியாகவும் இல்லை. அதனால் இவர்களுக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய சிறை தண்ட னையை அபராதத்தையும் ரத்து செய்கிறேன். இவர்கள் யாராவது சிறையில் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செலுத்திய அபராத தொகையை உடனே திருப்பி கொடுக்க வேண்டும்"என்று தீர்ப்ப ளித்துள்ளார்

    Next Story
    ×