என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்கு தொண்டர்கள் குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும்- வி.அலெக்சாண்டர் வேண்டுகோள்
- இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்க எடப்பாடியார் வழிவகை செய்தார்.
- சுருளிராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பத்தூரில் மதுரையில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெற உள்ள மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் பேசுகையில், புரட்சித்தலைவி அம்மா தலைமையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்ததை தற்போது பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் 2 கோடியே 47 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்க எடப்பாடியார் வழிவகை செய்தார். கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும் என்றார். மாவட்ட பொருளாளர் ரவி, ஆவடிகுமார், பகுதி செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ.ஜான், சி.வி.மணி,எஸ்.சங்கர், ஹேமேந்திரன், பிரகாஷ், எல்.என்.சரவணன், வக்கீல் அறிவரசன், வக்கீல் பார்த்தசாரதி, சுருளிராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் வட்ட நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்