search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் படுகாயம்
    X

    தடுப்புசுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பாடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து வாலிபர் படுகாயம்

    • தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம், சிட்கோ நகர் 46-வது தெருவை சேர்ந்தவர் பரத் (21). இவர் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் அம்பத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். பாடி மேம்பாலத்தில் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பரத், பாலத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×