search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    • மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வாலிபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பில் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற வாலிபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பலியானார். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அவரது பெயர் ஜீவகுமார். திருவொற்றியூர் ராஜா நகரை சேர்ந்தவர். உயிரிழந்த நபர் யார் என்பது தெரியவில்லை. அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை வாலாஜா சாலையில் அதிவேகமாக சென்ற கார் சென்னைப் பல்கலைகழக சுவற்றில் மோதியது. இதில் காரை ஓட்டி சென்ற பெரம்பூரைச் சேர்ந்த துணி கடை உரிமையாளர் கார்த்திக் படுகாயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காரில் பயணம் செய்த பெரம்பூர் அகரத்தை சேர்ந்த மேகநாதன், ஜெயக்குமார் ஆகிய இருவரும் ஓமாந்தூரார் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×