search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு

    • புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் அச்சமின்றி திருவள்ளுர் மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியலாம்.
    • புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளுர் மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கான பாதுகாப்பினையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

    தனி சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இடங்கள், தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு, அக்குழுக்கள் மூலம் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களை ஆய்வு செய்து சரியான பணிச் சூழல் நிலவுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் உடன் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி 1800 599 7626 மற்றும் வாட்ஸ்அப் எண். 9444317862-ல் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் அச்சமின்றி திருவள்ளுர் மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியலாம் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தொழிலாளர் நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருக்கு உரிய உத்தரவிடப்பட்டு புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×