search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு

    • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வதந்தி பரவியது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை.

    பொன்னேரி:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வதந்தி பரவியது. இதையடுத்து இதுபோன்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்குப்படும் என்று தமிழக அரசு எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் பொன்னேரியில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தனியார் தொழிற்சாலை உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ்சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டத்தில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று.மாநிலத்தில் உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிறது.

    கடந்த 2 நாட்களாக பரவிவரும் வதந்தி வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளாது. தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

    இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக 180 தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் மொத்தம் 2.5லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

    வடமாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை, பாதிப்புகள் ஏற்பட்டால் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 7626 -ல் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் வாட்ஸ் அப்பில் புகார்களுக்கு 9444317862 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×