search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியின்படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

    • கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே புளுகு மூட்டையின் மறு வடிவமாக காட்சி அளிக்கிறது.
    • தங்களுடைய பணி நிரந்தக் கோரிக்கை உட்பட அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    'பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்ற வாக்குறுதி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பக்கம்-57-ல் 181-வது வரிசை எண்ணில் இடம் பெற்றுள்ளது.

    ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த வாக்குறுதி குறித்து முதல்-அமைச்சர் மவுனம் சாதிப்பது 'பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே' என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளைத் தான் நினைவுபடுத்துகிறது.

    கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே புளுகு மூட்டையின் மறு வடிவமாக காட்சி அளிக்கிறது.

    தங்களுடைய பணி நிரந்தக் கோரிக்கை உட்பட அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, பகுதி நேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்யவும், அவர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவும் முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×