என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பாடி 200 அடி சாலையில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி- 2 பேர் படுகாயம்
- மோட்டார் சைக்கிளோடு நண்பர்கள் விக்னேஷ், யுவராஜ் ஆகியோர் விழுந்தனர்.
- போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்.
அம்பத்தூர்:
வில்லிவாக்கம், மேட்டு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது23). இவர் நேற்று இரவு பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்த நண்பரான யுவராஜ் (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மற்றொரு நண்பரை சந்திக்க சென்றார்.
பின்னர் நண்பர்கள் 2 பேரும் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பாடி மேம்பாலம் அருகே 200 அடிசாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிக்காக அங்கு கனரக வேன் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென கனரக வேன் மற்றும் அதன் அருகே நின்று கொண்டு இருந்த தொழிலாளி ஏழுமலை (60) மீது வேகமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளோடு நண்பர்கள் விக்னேஷ், யுவராஜ் ஆகியோர் விழுந்தனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். யுவராஜ், ஏழுமலை ஆகி யோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிசிக்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்