search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு மாவட்டத்தில் பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
    X
    போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

    • கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர்.
    • கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். மேலும் பொள்ளாச்சியிலும் பல்வேறு இடங்களில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. மேலும் பா.ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் நிரப்பிய பைகளை மர்ம கும்பல் வீசி சென்றது.

    இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள், பா.ஜனதா தலைவர்கள் வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் கோவில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் முன்பும் தலைவர்கள் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க்கில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் சிலைகள் உள்ளன. இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் காளை மாட்டு சிலை பகுதி, ஈரோடு ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, பஸ் நிலையம், வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அண்ணா - பெரியார் நினைவகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன், ஈஸ்வரன் கோவில், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு காய்கறி மார்க்கெட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேப்போல் இந்து முன்னணி அலுவலகம், பச்சப்பாளையம் ரோட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம், கொங்கம்பாளையத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் வீடு, இந்து முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம், மேற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் ஆகியோர் வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் மசூதிகள், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், கோபி பச்சைமலை பவளமலை கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாஜக அலுவலகங்கள், இந்து முன்னணி அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலத்தில் மணிக்கூண்டு பகுதி பஸ் நிலையம், தலைவர் சிலைகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அந்தியூர், பெருந்துறை, பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×