என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ராமேசுவரம் கடற்கரையில் ஒதுங்கிய 8 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல்- இலங்கைக்கு கடத்த முயற்சியா?
- கஞ்சாவை கடத்திச்சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமேசுரம் கடற்கரையில் கஞ்சா பார்சல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக சமூக விரோதிகள் கஞ்சா, தங்கம் உள்ளிட்டவற்றை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க கடலோர காவல் படை போலீசார் கடற்கரைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ராமேசுவரம் கடற்கரை பகுதியில் பார்சல் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பார்சலை கைப்பற்றினர்.
அதை பிரித்துபார்த்த போது 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது பல லட்சம் மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமேசுவரத்தில் இருந்து மர்ம நபர்கள் இலங்கைக்கு படகில் கடத்திச்சென்ற போது போலீசாரை கண்டதும் கஞ்சா பார்சலை வீசிச்சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கஞ்சாவை கடத்திச்சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேசுரம் கடற்கரையில் கஞ்சா பார்சல் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்