search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ள பாதிப்புக்கு யார் மீதும் பழிபோட்டு எந்த பயனும் இல்லை- கே.எஸ்.அழகிரி அறிக்கை
    X

    வெள்ள பாதிப்புக்கு யார் மீதும் பழிபோட்டு எந்த பயனும் இல்லை- கே.எஸ்.அழகிரி அறிக்கை

    • மக்கள் களநிலவரத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள்.
    • விமர்சனங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்ட மக்களிடம் எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தீவிர கண்காணிப்பின் காரணமாக முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் வெள்ள பாதிப்பால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது.


    கட்சி எல்லைகளைக் கடந்த மக்களின் ஆதரவோடு இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதில் எவர்மீதும் பழி போடுகிற படலத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. மக்கள் களநிலவரத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால் இத்தகைய விமர்சனங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்ட மக்களிடம் எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×