search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேமியுங்கள்.... கடன் வாங்காதீர்.... மகளிர் உரிமைத் தொகையை பயன்படுத்த பெண்களுக்கு உதவும் 70 பக்க கையேடு
    X

    சேமியுங்கள்.... கடன் வாங்காதீர்.... மகளிர் உரிமைத் தொகையை பயன்படுத்த பெண்களுக்கு உதவும் 70 பக்க கையேடு

    • பெண்களுக்கான கடன் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள், தொழில் முனைவோர் திட்டங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • பணத்தை எதற்காக சேமிக்கணும்? பணத்தை எங்கே சேமிக்கணும், பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்ற விவரங்களும் அதில் உள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 வாங்கும் பெண்களுக்கு 70 பக்க கையேடு ஒன்றும் இன்று வழங்கப்பட்டது.

    அதில் தமிழக அரசின் மகளிர் நலத்திட்டங்கள், அரசின் சுழல்நிதி வழங்கும் விவரம், மகளிருக்கான வங்கி கடன், சிறு தொழில் தொடங்கும் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெற்று உள்ளன.

    அதுமட்டுமின்றி இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், விதவை ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம், முதிர்கன்னி ஓய்வூதிய திட்டம், இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டம், வேலையில்லாதவர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டம், கல்வி உதவித்தொகை திட்டம், திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்கள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளன.

    மாணவ-மாணவிகள் உதவித்தொகை, அரசு தரும் உதவித்தொகைகள் உள்ளவைகளும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டங்களும் அதில் விரிவாக இடம் பெற்றுள்ளது.

    பெண்களுக்கான கடன் திட்டங்கள், பயிற்சித் திட்டங்கள், தொழில் முனைவோர் திட்டங்களும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாதவிடாய் சுகாதார திட்டம், தடுப்பூசி திட்டம், மருத்துவ சேவை திட்டம், நோய்கிருமி தொற்றில் இருந்து பாதுகாத்தல் ஆகிய விவரங்களும் அதில் உள்ளது.

    விடியல் பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்கள் முன்னேற்றத்துக்கான பயிற்சி திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவையும் அதில் இடம்பெற்று உள்ளன.

    பணத்தை எதற்காக சேமிக்கணும்? பணத்தை எங்கே சேமிக்கணும், பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்ற விவரங்களும் அதில் உள்ளது.

    வங்கிகள், அஞ்சலகங்களில் என்னென்ன சேமிப்பு திட்டங்கள் உள்ளது ஆகியவையும் அதில் உள்ளது.

    ஏ.டி.எம். அட்டையில் செய்யக்கூடாத விசயங்கள் என குறிப்பிட்டு பின் நம்பர், ஓ.டி.பி. எண்ணை யாருடனும் பகிர வேண்டாம், ஏ.டி.எம்.மில் அன்னியர் உதவியை நாட வேண்டாம், தொலைபேசி அழைப்புகளில் வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டாம்.

    கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலியான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் ஆகிய விவரங்களும் அதில் இடம் பெற்று உள்ளது.

    அது மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் தொலைபேசி எண்கள், மாவட்ட வருவாய் அதிகாரி, ஊரக வளர்ச்சி அதிகாரி, மகளிர் திட்ட இயக்குனர் ஆகியோரின் தொலைபேசி எண்களும் அதில் இடம் பெற்றுள்ளது.

    Next Story
    ×