என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு- போலீசாரின் 5 கேள்விகளுக்கு சில தினங்களில் பதிலளிக்க முடிவு
- மாநாடு பணிக்காக 27 குழுக்களை அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார்.
- பாதுகாப்பு பணிகளில் போலீசாருடன் இணைந்து 10 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
சென்னை:
விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் அரசியல் மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.
மாநாடுக்கு 33 நிபந்தனைகளை போலீசார் விதித்ததுடன் அதில் 17 நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 4-ந்தேதி மாநாட்டு பணிகள் பூஜையுடன் தொடங்கியது. மேடை மற்றும் வாகன நிறுத்தம், உணவுக் கூடங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 85 ஏக்கர் நிலப்பரப்பில் நடந்து வரும் மாநாடு பணிகளை கட்சி பொதுச்செயலாளர் அங்கு தங்கி இருந்து மாநாடு வளாகம் முழுவதையும் மோட்டார் சைக்கிளில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
மாநாடு பணிக்காக 27 குழுக்களை அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு பணிகளில் போலீசாருடன் இணைந்து 10 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் மாநாடு தொடர்பாக போலீசார் மீண்டும் 5 கேள்விகளை கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
அதில் 27-ந்தேதி மாநாடு நடைபெறும் போது மழை பெய்தால் லட்சக்கணக்கில் வரும் தொண்டர்களுக்கு என்ன ஏற்பாடு செய்துள்ளீர்கள்? வாகன நிறுத்தம் வரைபடங்கள் உள்பட 5 கேள்விகளை மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக போலீசாருக்கு அளிக்க வேண்டும் என நோட்டீசில் கூறியுள்ளனர்.
போலீசார் கேட்ட 5 கேள்விகளை தொடர்ந்து விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். போலீசார் கேட்ட 5 கேள்விகளுக்கும் கட்சி சார்பில் பதில்கள் தயாராகி வருகிறது. இன்னும் சில தினங்களில் 5 கேள்விகளுக்கும் கட்சி சார்பில் பதில் அளிக்கப்பட இருக்கிறது.
மாநாட்டு பந்தலை சுற்றிலும் அவசர சிகிச்சைக்காக மருத்துவக் குழுவினர் ஈடுபட உள்ளனர். மருத்துவ பணியில் 150 டாக்டர்கள், 150 நர்சுகள் பணிபுரிய இருக்கின்றனர். 15 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் மருத்துவக் குழுவினர் நேற்று மாநாடு பந்தலை பார்வையிட்டனர்.
மருத்துவ முகாம் அமைக்கப்பட இருக்கும் இடங்கள் பற்றி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்