search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்- சீமான் பேட்டி
    X

    விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார்- சீமான் பேட்டி

    • தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது.
    • ஒருவரை தாழ்ந்தவன் என்று சொல்ல மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளையும், ஆளாத மாநிலங்களில் ஆளும் கட்சியையும் பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை கொண்டு சோதனை நடத்துகிறது.

    தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது. கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லையா? இத்தனை நாட்கள் கழித்து தேர்தல் வரும் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? ஜெகத்ரட்சகன் இப்போ பணக்காரர் ஆனவர் இல்லை.

    இந்த சோதனையில் நேர்மை இல்லை என இது முதலமைச்சர் சொன்னது உண்மைதான். சோதனையை வைத்து அச்சுறுத்தலை பா.ஜ.க. செய்கிறது. இலங்கையில் ஜனநாயகம் இல்லை. சாதாரண பூர்வ குடிகளுக்கு பாதுகாப்பு இல்லை.

    இலங்கை ஜனநாயக நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ராணுவத்தில் அனைத்து தரப்பு இந்தியர்களும் இடம் பெற முடியும். ஆனால் இலங்கையில் பூர்வ குடிகள் ராணுவத்தில் இடம்பெற முடியாது.

    சனாதனம் என்றால் என்ன என்பதற்கான வரையறை இல்லை. வர்ணாசிரம தர்மம், சனாதனம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது. பிறப்பின் அடிப்படையில் உயர்வு- தாழ்வு சொல்வதுதான் சனாதன வர்ணாசிரம கொள்கை.

    இந்த கோட்பாடுகள் இந்த நூற்றாண்டிலும் அறிவியல் உலகத்திலும் இதனை நம்பிக் கொண்டு இருக்கின்றனர். ஒருவரை தாழ்ந்தவன் என்று சொல்ல மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, எனக்கு யாரும் அடிமை இல்லை, நானும் யாருக்கும் அடிமை இல்லை. இதைத்தான் பெரியாரும் சொல்கிறார்.

    உலகத்திலேயே உயர்ந்த குடி உலகத்திற்கு உணவளிக்கும் உழவர் குடி மட்டுமே. சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் கலந்து கொண்டதே குற்றம் என சொல்வதில் நியாயம் இல்லை. விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருகிறார். அவருடன் கூட்டணி வைப்போமா என்பது குறித்து அவருடன் பேசி விட்டு தான் சொல்வோம்.

    தற்பொழுது நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம். 20 தொகுதிகளில் பெண்களையும் 20 தொகுதிகளில் ஆண்களையும் நிறுத்துகின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×