search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு
    X

    மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு

    • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.40 அடியாக உள்ளது. 308 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. 135 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    தமிழக அரசு உத்தரவுப்படி முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 5 நாட்களில் 915 மில்லியன் கனஅடி திறக்கப்பட்டது. 2ம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு 4 நாட்களில் 376 மி.கனஅடி திறக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு இன்று காலை 10 மணிமுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    வினாடிக்கு 400 கனஅடி நீர் ஆற்றில் அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால் வைகை கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, வேறு தேவைக்காகவோ ஆற்றுக்குள் இறங்கக்கூடாது என அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

    வருகிற 27ம் தேதி வரை 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 48.13 அடியாக உள்ளது. 292 கனஅடி நீர் வருகிறது. பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 472 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.40 அடியாக உள்ளது. 308 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. 135 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 40.98 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

    பெரியாறு 13.6, தேக்கடி 1.2, போடி 1.6, மஞ்சளாறு 17, சோத்துப்பாறை 2, வீரபாண்டி 5, அரண்மனைபுதூர் 1.8 மி.மீ. மழையளவு பதிவானது.

    Next Story
    ×