என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நாய் காணவில்லை என போஸ்டர் அடித்து போலீசில் புகார் அளித்த இளைஞர்
- இலக்கியம்பட்டி பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளின் கதவுகளை தட்டுகின்றனர்.
- இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருடுபோய் உள்ளது.
தருமபுரி:
தருமபுரி அருகே இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
தருமபுரி அருகே இலக்கியம்பட்டி பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வீடுகளின் கதவுகளை தட்டுகின்றனர். இதனால் அந்த நேரத்தில் வீடுகளை யாரும் திறப்பதில்லை.
ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஒன்று திருடுபோய் உள்ளது.
இதனை தொடர்ந்து எங்கள் குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினோம். அப்போது வீட்டில் இருந்த என்னுடைய வளர்ப்பு நாயை காணவில்லை. இதனால் பல இடங்களில் தேடி பார்த்தேன்.
ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இந்த பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இளைஞர் தன் பாசமுள்ள வளர்ப்பு நாயின் புகைப்படத்தை போஸ்டர் பிரிண்ட் செய்து இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள காமவுண்டு சுவர்களில் ஒட்டி விளம்பரப்படுத்தி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்