என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருநின்றவூர் அருகே விபத்து- முன்னாள் ராணுவ வீரர் லாரி மோதி பலி
- போலீசார் விரைந்து வந்து பலியான சீனிவாசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த மிட்டன மில்லி ராணுவ குடியிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது51).இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கொசம்பாளையம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் அவர் மிட்டன மில்லியில் இருந்து திருநின்றவூர் வழியாக பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பஸ்நிலையம் அருகே பெரியபாளையம் சாலையில் சென்றபோது திடீரென லாரி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சீனிவாசன் சிக்கிக்கொண்டார். இதில் ஹெல்மெட் அணிந்த நிலையிலும் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான சீனிவாசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்