search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருநின்றவூர் அருகே விபத்து- முன்னாள் ராணுவ வீரர் லாரி மோதி பலி
    X

    திருநின்றவூர் அருகே விபத்து- முன்னாள் ராணுவ வீரர் லாரி மோதி பலி

    • போலீசார் விரைந்து வந்து பலியான சீனிவாசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த மிட்டன மில்லி ராணுவ குடியிருப்பை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது51).இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கொசம்பாளையம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் அவர் மிட்டன மில்லியில் இருந்து திருநின்றவூர் வழியாக பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை பஸ்நிலையம் அருகே பெரியபாளையம் சாலையில் சென்றபோது திடீரென லாரி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சீனிவாசன் சிக்கிக்கொண்டார். இதில் ஹெல்மெட் அணிந்த நிலையிலும் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பலியான சீனிவாசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×