search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    எல்லாம் மேலே இருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள்... காங்கிரஸ் நம்பிக்கை
    X

    எல்லாம் மேலே இருப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள்... காங்கிரஸ் நம்பிக்'கை'

    • தி.மு.க. எண்ணம் வேறு விதமாக உள்ளது.
    • இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் 40-க்கு 40 என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

    இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடுகள் திரைமறைவில் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தற்போது கைவசம் இருக்கும் 9 தொகுதிகளையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது.

    அதே நேரம் தற்போதைய எம்.பி.க்கள் அனைவரும் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க. எண்ணம் வேறு விதமாக உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் 40-க்கு 40 என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

    அதற்கு ஏற்றவாறு தொகுதியின் நிலைமை, கட்சியின் செல்வாக்கு, எந்த வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு என்பதை தீர ஆராய்ந்தே தொகுதி ஒதுக்க வேண்டும். எனவே தொகுதி மாறலாம், குறையலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இது காங்கிரஸ் நிர்வாகிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆனாலும் நம்பிக்கை தளரவில்லை. எல்லாம் மேலிருப்பவர்கள் பார்த்து கொள்வார்கள் என்கிறார்கள் நம்பிக்கையுடன். அதாவது டெல்லி தலைமை பார்த்துக் கொள்ளும் என்கிறார்கள். நம்பிக்கை பலித்தால் சரிதான்.

    Next Story
    ×