search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தொடர் விடுமுறை- ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    தொடர் விடுமுறை- ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
    • தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளிலும் கோடைமழை பெய்ததால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிலும் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1000 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை அளவு குறைந்ததால் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்று சரிந்து வினாடிக்கு 500 கனஅடியாக குறைந்து வந்தது. நீர்வரத்து குறைவாக இருப்பினும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.

    தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலையத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முதலைப் பண்ணை, தொங்கும் பாலம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தபோதிலும் பிலிகுண்டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×