search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இளைஞரணி மாநாடு வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    இளைஞரணி மாநாடு வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • சேலம் மாநாட்டுத்திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-கலைஞரின் உருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.
    • கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாசிச இருளகற்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத்திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-கலைஞரின் உருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.

    இந்த சுடர், சென்னை-காஞ்சிபுரம்-விழுப்புரம்-கள்ளக்குறிச்சி-சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன் பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்பட உள்ளது.

    சேலம் மாநாட்டுத்திடலில் வரும் ஜனவரி 20-ந் தேதி மாலை இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்க உள்ளேன்.

    கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம்-பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×