search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னை தொழிலாளியின் மனைவி 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பலி
    X

    மகள் ஸ்ருதிஹாவுடன் ரேணுகா.

    சென்னை தொழிலாளியின் மனைவி 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பலி

    • போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரேணுகா மற்றும் குழந்தைகள் உடல்களை மீட்டனர்.
    • ரேணுகாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேலபுலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). சென்னையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பேபி என்கிற ரேணுகா (30) தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    தம்பதியின் மகள் ஸ்ருதிஹா (5), மகன் தீபக் (3) இருவரும் அங்குள்ள அங்கன்வாடியில் படித்து வந்தனர். ரேணுகா தனது 2 குழந்தைகள் மாமனார் மாமியாருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மதியம் ரேணுகா அங்கன்வாடியில் இருந்து குழந்தைகளை அழைத்து வர செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பவில்லை உடனே அங்கன்வாடிக்கு சென்று விசாரித்தனர். அப்போது ரேணுகா அவரது குழந்தைகளுடன் மதிய உணவை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் மேலபுலம் ஏரிக்கரை அருகே உள்ள விவசாய கிணற்றில் ரேணுகா மற்றும் அவரது 2 குழந்தைகள் பிணமாக மிதந்தனர். அந்த வழியாக மாடு மேய்க்க சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவலறிந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ரேணுகா மற்றும் குழந்தைகள் உடல்களை மீட்டனர். 3 பேர் உடல்களை ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக ரேணுகா 2 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    ரேணுகாவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சங்கர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் மனைவி குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×