என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
மகளிர் உரிமைத்திட்டம்: சென்னையில் இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள் விண்ணப்பம் பதிவு
- சென்னையில் 17 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்தாலும் இன்னும் சில வீடுகளுக்கு விண்ணப்ப படிவம் சென்றடையவில்லை.
- விண்ணப்ப படிவம் வாங்கிய பல பேர் இன்னும் பூர்த்தி செய்து கொடுக்காமல் உள்ளனர்.
சென்னை:
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், விண்ணப்ப படிவங்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களிடம் வழங்கப்பட்டு உள்ளன.
முதற்கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஜூலை 24-ந்தேதி முதல் சிறப்பு முகாம்களில் பெறப்பட்டு வருகிறது. ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரை முகாம்கள் மூலம் முதற்கட்டமாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகரில் 1,428 ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 704 ரேஷன் கடை பகுதிகளில் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் 1,730 பதிவு செய்யும் முகாம்கள் சென்னை மாநகரில் அமைக்கட்டுள்ளன. இதில் 2-வது கட்டத்தில் மற்ற முகாம்களில் பதிவு செய்யும் பணிகள் தொடங்கும்.
ஒவ்வொரு முகாம்களிலும் 2,266 பயோமெட்ரிக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் 704 சிறப்பு முகாம் பொறுப்பு அலுவலர்கள் 1,730 தன்னார்வலர்கள், 704 உதவி தன்னார்வலர்கள்1,515 போலீசார், 154 நகரும் குழுக்கள் இந்த சிறப்பு முகாம்களுக்காக பணியாற்றி வருகிறார்கள்.
ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்கிற வகையில் 1,730 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த முகாம்களில் இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரம் பெண்கள், விண்ணப்பங்களை கொண்டுவந்து பூர்த்தி செய்து பதிவு செய்து உள்ளனர்.
சென்னையில் 17 லட்சம் ரேஷன் கார்டுகள் இருந்தாலும் இன்னும் சில வீடுகளுக்கு விண்ணப்ப படிவம் சென்றடையவில்லை. இதை கருத்தில் கொண்டு வீடுவீடாக தொடர்ந்து விண்ணப்ப படிவம் கொடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இப்போது 5.30 லட்சம் விண்ணப்ப படிவங்களை வீடுவீடாக சென்று வழங்கி உள்ளதாக மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப படிவம் வாங்கிய பல பேர் இன்னும் பூர்த்தி செய்து கொடுக்காமல் உள்ளனர். இதனால் சிறப்பு முகாம்களில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. தினசரி 70 ஆயிரம் விண்ணப்பம் என்ற அளவில் முகாம்களில் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்