search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் பிழையை தடுக்க ஒத்திகை எடுப்பது முக்கியம்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
    X

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் பிழையை தடுக்க ஒத்திகை எடுப்பது முக்கியம்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    • பிழை என்பதே வரும் நாட்களில் எந்த விழாக்களிலும் இருக்கக்கூடாது.
    • தேவைப்பட்டால் இதற்குண்டான ஒத்திகை எடுப்பதும் முக்கியம்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய கீதம் இந்தியாவிற்கு எப்படி பெருமை சேர்க்கிறதோ அதே போல தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. இதனுடைய வரிகள், உச்சரிப்பு பாடும் போது மிக முக்கியம். இதில் பிழை என்பதே வரும் நாட்களில் எந்த விழாக்களிலும் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் இதற்குண்டான ஒத்திகை எடுப்பதும் முக்கியம். தமிழ்த்தாய் வாழ்த்தில் அரசியல் கூடாது.

    இதனுடைய நோக்கமே தமிழ்நாடு, தமிழ்வளர்ச்சி, தமிழ்பற்று. இதில் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆதாயத்திற்கும், விளம்பரத்திற்கும் மட்டுமே இருக்கக்கூடும். தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் பாடல்கள் என்பதால் சரியாகப் பாட வேண்டும் என்பதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×