என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம் (World)
துபாயில் 35 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
- அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
- தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது
துபாய்:
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் 35 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடம் உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அருகே உள்ளது.
போல்லார்டு லாக் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக கட்டிடத்தின் மேல் நோக்கி பரவியது. இதனால் கட்டிடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கட்டிடம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. துபாயில் உயரமான கட்டிடங்களில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. இதற்கு கட்டுமான பொருட்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு புர்ஜ் கலிபா அருகே ஓட்டல் மற்றும் வீடுகளில் தீவிபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தீ விபத்து ஏற்பட்ட 35 மாடி கட்டிடத்தின் உரிமையாளரான எமார் பிராப் பர்ட்டீஸ் நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்