search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிரசாரத்தை தொடங்கிய பா.ஜ.க. - சுவர் விளம்பரங்கள் வரையும் பணி தீவிரம்
    X

    சுவர் விளம்பரம் வரைந்து பிரசாரத்தை தொடங்கியுள்ள பா.ஜனதா

    பிரசாரத்தை தொடங்கிய பா.ஜ.க. - சுவர் விளம்பரங்கள் வரையும் பணி தீவிரம்

    • காட்டேரிக்குப்பத்தில் சுவர் விளம்பரம் வரையும் பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.
    • வேட்பாளர் யார்? என தெரியும் முன்பே புதுச்சேரியில் பா.ஜனதா தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது .

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியானது.

    வேட்பாளர் யார்? என இன்னும் முடிவு செய்யப்படாத சூழ்நிலையில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜனதாவினர் சுவர் விளம்பரங்கள் வாயிலாக தேர்தல் பணியினை தொடங்கியுள்ளனர்.

    தேர்தல் பணியில் முந்திக்கொண்ட பா.ஜனதாவினர் மண்ணாடிப்பட்டு தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்களை வரைந்து வருகின்றனர்.

    அதில் தாமரை சின்னத்துடன் வாசகமும் இடம்பெற்றிருந்தது.

    காட்டேரிக்குப்பத்தில் சுவர் விளம்பரம் வரையும் பணியினை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபடுமாறு கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

    உற்சாகமடைந்த பா.ஜனதா நிர்வாகிகள் தொகுதி முழுவதும் சுவர் விளம்பரம் வரையும் பணியில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

    அதற்கு முன்னதாக திருக்கனூர் கடைவீதியில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 62 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 78 லட்சம் உதவித்தொகை வழங்கும் பணி ஆணையினை அமைச்சர் நமச்சிவாயம் பயனாளிகளிடம் வழங்கினார்.

    வேட்பாளர் யார்? என தெரியும் முன்பே புதுச்சேரியில் பா.ஜனதா தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது .

    எதிர்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×