search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சாவர்க்கரை பற்றி தெரிந்து போராட்டம் நடத்துங்கள்- கவர்னர் தமிழிசை காட்டம்
    X

    சாவர்க்கரை பற்றி தெரிந்து போராட்டம் நடத்துங்கள்- கவர்னர் தமிழிசை காட்டம்

    • நான் சாவர்கர் பெயர் பலகையை வைத்தேன்.
    • சாவர்கர் பற்றி தெரிந்து கொண்டு போராட்டம் நடத்தட்டும்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக பிரதமரின் ஸ்வாநிதி மகோத்சவ் என்ற பெயரில் சுயசார்பு சாலையோர வியாபாரிகளின் திருவிழா கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது. திருவிழாவை கவர்னர் தமிழிசை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அரங்குகளை பார்வையிட்டார்.

    இதன்பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை காந்தி திடலில் அமைக்கப்பட்டு வரும் தியாக பெருஞ்சுவரில் சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர் பலகை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதில் நான் சாவர்கர் பெயர் பலகையை வைத்தேன். அதற்கு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    சாவர்கர் பற்றி தெரிந்து கொண்டு போராட்டம் நடத்தட்டும். அந்தமானில் உள்ள சிறைச்சாலைக்கு ஒரு முறை சென்று பார்த்து விட்டு சாவர்க்கர் பற்றி அறிந்து பாருங்கள். அவர் சுதந்திர போராட்டத்திற்காக சிறையில் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது தெரியும். அவருடைய கொள்கையில் வேறுபாடு இருக்கலாம்.

    ஆனால் சுதந்திரப் போராட்ட வீரர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாவர்கர் சுதந்திர போராட்ட வீரர் என்பது அதிகாரப்பூர்வமாக, சரித்திர பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் எல்லாவற்றையும் அரசியல் ஆக்க நினைக்காதீர்கள்.

    சாவர்க்கர் பற்றி அந்தமான் சிறையில் ஒலி, ஒளி காட்சி நடத்துவார்கள், அதை பார்த்தால் கண்ணீர் வரும். அதைப்பார்த்துவிட்டு வந்து போராட்டம் நடத்துங்கள். இதுபோன்ற போராட்டங்களை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவது கிடையாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×