search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொகுதி தோறும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குங்கள்- கிஷன் ரெட்டி உத்தரவு
    X

    தொகுதி தோறும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்குங்கள்- கிஷன் ரெட்டி உத்தரவு

    • புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
    • புதுச்சேரியில் சிறு, சிறு பிரச்சனைகள் கட்சிக்குள் இருப்பது தெரியும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பாஜக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரி கிஷன்ரெட்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    சவால்கள் நிறைந்த காலத்தில், குறிப்பாக எதிர் கட்சிகள் பலமான கூட்டணியை தாண்டி பாஜக வெற்றி பெற்றுள்ளது. புதுவை தொகுதியில் பாஜக தீவிரமாக போட்டியிட்டு 30 சட்டமன்ற தொகுதியிலும் கடுமையாக உழைத்து தாமரை சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

    தேர்தலில் சுமார் 3 லட்சம் ஓட்டுகள் பெற்றுள்ளோம். இது பா.ஜனதாவுக்கு மிகப்பெரும் வளர்ச்சி. இன்னும் 2 ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. 2026 தேர்தலுக்கு முன்பாக சமூகவலைதளங்களில் காங்கிரசின் குடும்ப அரசியல், துஷ்பிரயோகங்களை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.


    புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் வேலைகளை தொடங்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்.

    புதுச்சேரியில் சிறு, சிறு பிரச்சனைகள் கட்சிக்குள் இருப்பது தெரியும். தேசிய தலைவர் நட்டா, மோடி ஆகியோர் வழிகாட்டுதல்களோடு இந்த பிரச்சனைகளை களைவோம்.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயல்பட்டால் 2026 தேர்தலில் பாஜக வெற்றி பெறும். புதுவை மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவும். புதுவை மீது மோடி தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×