search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபாய எச்சரிக்கை"

    • சுற்றுலா சென்ற இடத்தில் 5 கல்லூரி மாணவர்கள் பலி
    • குளிக்கவும், செல்பி எடுக்கவும் தடை

    வால்பாறை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா சென்ற 5 கல்லூரி மாணவர்கள் கடந்த 20-ந் தேதி அன்று ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர்.

    எனவே ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைப்பகுதிகளல் குளிப்பது, புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதை குழந்தைகள், சுற்றுலாபயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருப்பதினால் பல நேரங்களில் நீர்நிலைகளில் அடித்து சென்று உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு வனத்துறை மற்றும் வால்பாறை நகராட்சி மூலம் வால்பாறை, அதனை சுற்றியுள்ள ஆபத்தான ஆறு மற்றும் நீர்நிலைகளான நீர்வீழ்ச்சி எஸ்டேட் நதி, கருமலை எரச்சை பாறை, கூலங்கல் ஆறு, சோலையார் வளைவு, ஸ்டான்மோர் நதி, கெஜமுடியில் கூடுதோரை, வெள்ளைமலை சுரங்கப்பாதை, கெஜமுடி சுரங்கப்பாதை, சக்தி எஸ்டேட் தங்கவேல் ஆறு, தாளனார் நீர்வீழ்ச்சி, காதம்பரை அணை, மேல் ஆழியாறு அணை, காதம்பரை 501 சுரங்கப்பாதை, சந்தன அணை, சோலையார் அணை முன்பக்க ஆறு, சின்னக்கல்லார், நல்ல முடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு, வாட்டர்பால்ஸ் எஸ்டேட்டில் புலி பள்ளத்தாக்கு, அனலி நீர்வீழ்ச்சி, மனோம்பள்ளியில் தங்கவேல் ஆறு ஆகிய 20 இடங்களில் அபாய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.

    எனவே இந்த இடங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், இந்த ஆற்றுப்பகுதி மிகவும் ஆழமானதாகவும், ஆபத்தானதாகவும் மற்றும் சுழல்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இப்பகுதியில் சென்று குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி இல்லை. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவவாறு அவர் கூறி உள்ளார். 

    கேரளாவில் இடுக்கி, பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRainfall #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    இலங்கை கடற்குதி அருகேயுள்ள அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதன் எதிரொலியாக கேரளாவின் இடுக்கி, பாலக்காடு மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பேரிடர் மீட்பு குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    தகுந்த காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம். சுற்றுலா பயணிகள் தங்கள் பயணங்களை தள்ளி வைக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். #KeralaFloods #KeralaRainfall #PinarayiVijayan
    தமிழகத்துக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Cauvery
    சேலம்:

    கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பி வருகின்றன.  இந்த நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.  இதனால் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து மேட்டூர் அணை முதல் எடப்பாடி வரை காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  இதேபோன்று ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரையிலான பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். காவிரி கரையோர மக்களின் நலன் கருதி சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

    பொது மக்கள் அவரச உதவிக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ×