search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயர்லாந்து இந்தியா"

    அடுத்துவரும் போட்டிகளில் ஏராளமான பரிசோதனைகளை செய்ய இருக்கிறோம் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #IREvIND
    இந்திய கிரிக்கெட் அணி சுமார் இரண்டரை மாத சுற்றுப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இரண்டு டி20 போட்டிகளில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 208 ரன்கள் குவித்து 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வழக்கமாக 3-வது இடத்தில் இறங்கும் கோலி 6-வது வீரராக களம் இறங்கினார். அவர் இரண்டு பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஆட்டம் நாளை நடைபெறுகிறது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த நான்கு போட்டிகளிலும் ஏராளமான பரிசோதனை முயற்சிகளை செய்ய இருக்கிறோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எதிரணிகளுக்கு ஆச்சர்யம் அளிக்க இருக்கிறோம். அதேபோல் மிடில் ஆர்டரில் மாற்றங்கள் செய்த பார்க்க இருக்கிறோம். தொடக்க பேட்ஸ்மேன்களை தவிர்த்து மிடில் ஆர்டரில் ஏராளமான பரிசோதனைகளை செய்து பார்க்க இருக்கிறோம் என்று ஏற்கனவே நாங்கள் சொல்லியிருக்கிறோம். அடுத்த சில டி20-யில் தேவைக்கேற்ப வீரர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளோம்.



    சூழ்நிலைக்கு ஏற்ப யாரை களம் இறக்குவது என்று பார்த்து, அதற்கேற்றபடி வீரர்களை களம் இறக்கி எதிரணிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்த முயற்சி செய்வோம். இன்று மிடில் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்தவர்களுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படாது. வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளனர். ஆனால், சர்வதேச போட்டியில் ஆடுகளத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது அவசியமானது’’ என்றார்.
    குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பந்து வீச்சை எப்படி சமாளிப்பது என யோசிக்க வேண்டியுள்ளது என்று அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் தெரிவித்துள்ளார். #IREvIND
    இந்தியா - அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா (97), தவான் (74) ரன்கள் ஆகியோரின் அதிரடியால் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய அயர்லாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சாளர்களில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் 8 ஓவரில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பறினார்கள்.

    இந்நிலையில் இந்த இருவரையும் எப்படி சமாளிப்பது என்பதுதான் எங்களுக்கு முக்கிய வேலை என்று அயர்லாந்து கேப்டன் கூறியுள்ளார்.



    மேலும் இதுகுறித்து அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் கூறுகையில் ‘‘நாங்கள் வீரர்கள் அறையில் உட்கார்ந்து குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பந்து வீச்சை 2-வது ஆட்டத்தில் எப்படி சமாளிப்பது என்பது குறித்து யோசிப்பது தேவையானது.

    இந்தியா உலகத்தரம் வாய்ந்த அணி. இரண்டு முன்னணி பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய தொடக்கத்தை கொடுத்தார்கள். சுழற்பந்து வீச்சு 2-வது இன்னிங்சில் இந்த அளவிற்கு வேலை செய்யும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் சுழற்பந்து வீச்சை அதிக அளவில் பயன்படுத்திருக்க வேண்டும்’’ என்றார்.
    ×