search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடி மின்னலுடன் பலத்த மழை"

    வேலூரில் பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    வேலூர்:

    வேலூரில் ‘அக்னி நட்சத்திரம்’ முடிந்த பின்னரும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

    பகல் முழுவதும் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது.

    அதன்பின் சில மணி நேரம் ஓய்ந்திருந்த மழை இரவு 10.30 மணி முதல் மீண்டும் பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12.30 மணிவரை தொடர்ந்து மழை பெய்தது. பல்வேறு பகுதியில் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    புதிய பஸ் நிலையம் கிரீன் சிக்னல் பகுதி, சர்வீஸ்ரோடு, ஆரணி ரோடு, நேதாஜி மைதானம், கோட்டை மைதானம், ஆற்காடு ரோடு கோடையிடி குப்புசாமி பள்ளி மைதானம் போன்ற இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. வேலூரில் 89.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    அதேபோல் மாவட்டத்தில் ஆற்காடு குடியாத்தம், மேல் ஆலத்தூர், வாலாஜா, அரக்கோணம் காவேரிப்பாக்கம், சோளிங்கர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் மழை கொட்டியது.

    கோடை மழையால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×