search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிசாமி"

    • கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள்.
    • யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கலந்து கொண்டார். பின்னர் மணப்பாறையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கள்ளர் சீர் மரபினர் பள்ளிகளை இணைப்பை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 24-ந் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எல்லா துறை சார்ந்து இருக்கின்ற பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று 2023-24 ம் ஆண்டு அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்தவர்கள் ஒரு அறிவிப்பை அறிவித்தார்கள்.

    அந்த அறிவிப்பு வந்த பின் அதற்கு தனி குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறை சார்ந்து இருக்கின்ற அமைச்சர்கள் கருத்துக்களை என்னிடம் வழங்கினார். அதுகுறித்து அறிக்கை உள்ளது. ஆனால் அதுகுறித்து எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.

    பல அமைப்புக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இதை எயல்லாம் தொகுத்து முதல்வரிடம் கொடுத்துள்ளோம். இறுதியாக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்கள். ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போரட்டம் நடத்தலாம்.

    ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் வியூகத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது எந்தவிதத்திலும் சரியானது அல்ல.

    கல்வியை வைத்து கருத்துக்களை சொல்லுங்கள். ஆனால் கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதல்வர் முடிவெடுத்த பின் தங்களின் கருத்தக்களை தெரிவிக்கலாமே தவிர யூகத்தின் அடிப்படையில் போராட்டம் நடத்துவது தேவையற்றது என்பது என்னுடைய கருத்து.

    அரசு பள்ளிகளில் உள்ள ஐடெக் லேப்களில் தனியாக ஆசிரியர் தேவை என்பதை நானும் உறுதி செய்கிறேன். 3 ஆண்டுகளில் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை தர மறுப்பதுடன் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தருவேன் என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள்.

    இதில் எதிர் கட்சித் தலைவர் எந்த குரலும் கொடுக்காத நிலையில் இறுதி முடிவு எடுக்காத ஒரு விஷயத்திற்கு போராட்டம் என்பது தேவையில்லாதது.

    எடப்பாடி பழனிசாமி 2026-ம் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இப்போதே அரசியல் செய்ய நினைக்கிறார். ஆர்ப்பாட்டம்-பேராட்டத்தை கைவிடுங்கள். தமிழக முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
    • அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.

    சென்னை:

    திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

    * நாட்டு நடப்பு தெரிய வேண்டும் அல்லது இபிஎஸ்-க்கு மண்டையில் மூளையாவது இருக்க வேண்டும்.

    * ஏற்கனவே அண்ணா, எம்ஜிஆர் போன்றவர்களுக்கு வெளியிடப்பட்ட நாணயத்தை இபிஎஸ் பார்த்திருக்க மாட்டார்.

    * எல்லா தலைவர்களின் நாணயத்திலும் இந்தி தான் இடம் பெற்றிருக்கும்.

    * இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்துள்ளார்.

    * அண்ணாவிற்கு வெளியிடப்பட்ட நாணயத்தில் அவர் தமிழ் கையெழுத்தை கலைஞர் இடம் பெற செய்தார்.

    * ஜெயலலிதா அம்மையாரால் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி உள்ளனரா?

    * இரங்கல் கூட்டம் நடத்தாத அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.

    * இபிஎஸ் போன்று ஊர்ந்து சென்று பதவி வாங்கும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது.

    * சங்கரை போல் எனக்கும் கோபம் வரும், ஆனால் கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்

    * அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன், நமக்கென்று இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

    • திமுக-பாஜக-வின் ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
    • இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது.

    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறிவிட்டு பங்கேற்றதன் மூலம் திமுக-பாஜக-வின் ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.

    மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. அந்த நாணயத்தில் இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. தமிழ்... தமிழ்... என்று பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று முதலமைச்சர் கூறினார்.

    ஆனால் திடீரென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களோடு அந்த விருந்தில் பங்கேற்று உள்ளார். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்றால், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதன் பின்னர்தான் முதலமைச்சர் அந்த விருந்தில் கலந்து கொண்டு இருக்கிறார். இதில் இருந்து திமுகவும், பாஜக-வும் ரகசிய உறவு வைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது.

    பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோது எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நாணயத்தை அதிமுகவே வெளியிட்டது. நாங்கள் பாஜக-வை அழைக்கவில்லை. ஆனால் திமுக, இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு, விழாவுக்கு ராகுல்காந்தியை அழைக்காமல், பாஜக-வை அழைத்து நாணயத்தை வெளியிடுகிறது. இதில் இருந்தே அவர்களின் ரகசிய உறவு வெட்டவெளிச்சமாகி இருக்கிறது என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,

    திமுக மற்றும் பாஜக ஆகியவை தனித்தனி பாதைகளில் பயணிக்கிறது.

    இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

    • இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான்.
    • இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம்.

    இன்று திமுக அரசிற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த குற்றச்சாட்டிற்கு திமுக எம்.பி. ஆ. ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதில் கொடுத்துள்ளார்.

    அவரது பதிவில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங் ஏன் வருகிறார், ராகுல்காந்தியை ஏன் எதற்கும் அழைப்பதில்லை என்று அவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார். இந்தியாவில் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது ஒன்றிய அரசுதான் என்பதால், ஒன்றிய அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு சிறப்பிப்பதில் என்ன பிரச்சினை எடப்பாடி பழனிசாமிக்கு?

    கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை மேலும் அதிகரிக்கிறது. இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். அ.திமு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருப்பதையும் அதிலும் இந்தி எழுத்துகள் இருப்பதையும்கூடவா எடப்பாடி பழனிசாமி அறியவில்லை? முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள நாணயத்தில்தான் 'தமிழ் வெல்லும்' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது. இதைக்கூட உணராமல் எடப்பாடி பழனிசாமி உளறியிருப்பதால் அவரை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பதில்லை எனப் புரியவில்லை.

    எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நிறுவப்பட்ட சிலையை, பா.ஜ.க தலைவராக ஒரு காலத்தில் இருந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்ததை இப்போது விமர்சிக்கிற எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையைத் திறந்து வைத்தது காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்திதான் என்பதையாவது அறிவாரா?

    உறவுக்கு கை கொடுப்போம்-உரிமைக்கு குரல் கொடுபபோம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் இலக்கணம். அந்த வகையில்தான் ஒன்றிய அரசின் நாணயம் வெளியீட்டு விழாவும், ஆளுநரின் தேநீர் விருந்தும் நடைபெற்றது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்குரிய நிதியை வழங்காமலும்-தமிழ்நாட்டிற்கானத் திட்டங்களை செயல்படுத்தாமலும் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறையாவது படித்துப் பார்க்கட்டும்.

    ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கின்ற இயக்கம் தி.மு.கழகம் என்பதை இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரே முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமைப் பண்பு குறித்து பாராட்டியிருக்கிறார். அதே தலைமைப் பண்பையும் பக்குவமான அணுகுமுறையையும் இன்றைய கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நிறைந்திருக்கிறது. அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்தக் கட்சியான அ.தி.மு.க.வையே அழித்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களே குமுறுகின்ற நிலையை மறைப்பதற்கு, தி.மு.க. மீது பழி போட்டுத் திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்பமாட்டார்கள்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கனவு. அதனை 1972ஆம் ஆண்டில் முதன்முதலில் செயல்படுத்த முனைந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும், ஒவ்வொரு முறையும் தி.மு.க ஆட்சி அமைந்தபோது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்ட மக்கள் அறிவார்கள். அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும், விவசாயிகளும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் தலைமையிலான அரசுதான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இந்திய ஒன்றியமே கொண்டாடுவதையும், மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்காலக் கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றியிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் 'காந்தாரி' போலக் கதறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பதற்றத்தில் அவர் பேசுவதெல்லாம் பிதற்றலாக உள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
    • நாங்கள் பாஜக அணியில் இருந்தபோதுகூட பாஜக தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என்றார்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 90 சதவீத பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள 10 சதவீத பணிகளை 3 ஆண்டாக தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் இருந்தது.

    அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டப் பணிகள் தி.மு.க. ஆட்சியில் ஆமை வேகத்தில் நடக்கிறது.

    தமிழ் தமிழ் என மூச்சுக்கு 300 முறை ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் கருணாநிதி நினைவு நாணயத்தில் இந்தி வார்த்தை இருக்கிறது. ஸ்டாலின் குடும்பத்துக்கு என்று வந்தால் இந்தி பற்றி கவலை கொள்ளமாட்டார்கள்.

    கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணிப்பதாகக் கூறிவிட்டு அரசு சார்பில் முதலமைச்சர் பங்கேற்றது வேடிக்கையாக உள்ளது.

    கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க. புறக்கணிக்கும் என ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் அண்ணாமலை பங்கேற்பதாக அறிவித்ததும் தி.மு.க. நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    கவர்னரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதன் மூலம் தி.மு.க-பா.ஜ.க. உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்தியை அழைக்காதது ஏன்?

    டெல்லி தி.மு.க. தேநீர் விருந்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். ஆனால் ராகுல் காந்தியை அழைக்கவில்லை.

    நாங்கள் பா.ஜ.க. அணியில் இருந்தபோதுகூட, பா.ஜ.க. தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை என தெரிவித்தார்.

    • விடியா திமுக அரசு பதவியேற்றது முதல், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
    • அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள், விடியா தி.மு.க. ஆட்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்கும், சாலையில் செல்வதற்கும் லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    எனது தலைமையிலான அம்மா ஆட்சியின்போது, மக்கள் நலன் கருதி திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு நலத் திட்டப் பணிகள், சாலைப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், பல இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களுடன் கூடிய சாலையோர பூங்காக்கள், கைப்பிடிகளுடன் கூடிய நடைமேடைகள், பல சமூக நலத் திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன. ஆனால், விடியா திமுக அரசு பதவியேற்றது முதல், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

    மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், வருகிற 20-ந் தேதி காலை 10.30 மணியளவில், மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ப. மோகன் தலைமையிலும்; திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், திருச்சி மாநகராட்சி முன் னாள் துணை மேயருமான து.சீனிவாசன் முன்னிலையிலும் நடைபெறும்.

    இதில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.
    • எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகப்படி அதிமுகவினர் தேர்தல் பணியாற்றி வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடியது.

    பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் திமுக அரசு, மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில்,

    * நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.

    * விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதிலும், விலையில்லா 5 பள்ளிச் சீருடைகள் வழங்குவதிலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்.

    * மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை அறிவிக்காதது, நிதி ஒதுக்காததை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.

    * எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகத்தின்படி உள்ளாட்சி தேர்தல், 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதாக தீர்மானம் நிறைவேற்றம்.

    * எடப்பாடி பழனிசாமி வகுக்கும் வியூகப்படி அதிமுகவினர் தேர்தல் பணியாற்றி வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடியது.
    • பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடியது.

    பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செயற்குழு உறுப்பினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஏற்கனவே, கடந்த 9-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, செயற்குழு கூட்டம் அவசரமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், இன்றைய கூட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்று தெரிகிறது.

    • 40 சதவீதம் வரை பாட புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
    • பாட புத்தக விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கான பாட புத்தகங்களின் விலையை அரசு உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

    * பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பாட புத்தகங்களின் விலையை உயர்த்தியது கண்டனத்திற்குரியது.

    * 40 சதவீதம் வரை பாட புத்தகங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி போட்டி தேர்வுக்கு தயாராவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * விலைவாசி உயர்வால் சிரமப்படும் நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    * அரசு பாடத்திட்டத்தில் பயிலும் தனியார் பள்ளி மாணவரிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

    * பாட புத்தக விலை உயர்வால் மாணவர்களின் பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

    * பாட புத்தங்களின் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • ரஜினி, கமல், திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
    • வருகிற 18-ந்தேதி மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

    அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்க முதலமைச்சர் விரும்புகிறார்.

    அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது வீடு தேடி சென்று தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் அழைப்பிதழ் கொடுத்து உள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பால கிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வு ரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

    இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பலமுறை நான் அரசாங்கத்திடம் எடுத்து சொல்லி இருக்கின்றேன்.
    • தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஆலச்சம்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.72.85 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த புதிய வகுப்பறை கட்டிடங்களை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-

    நான் முதல் முதலாக 1989-ல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தது. இதனால் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதனால் அன்று முதல் இன்று வரை உங்களோடு, உங்கள் குடும்பத்தில் ஒருவராக நான் இருந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட சுமார் 1809 வாக்குகள் 4 பூத்களில் கூடுதலாக தந்து இருக்கிறீர்கள். ஆகவே இப்போதும் ஆலச்சம்பாளையம் என்றால் அ.தி.மு.க.வுடைய கோட்டை என்பதை பல தேர்தல்களில் நிருபித்து காட்டியிருக்கிறீர்கள்.

    ஆகவே தான் நீங்கள் எப்போதும் ஆலச்சம்பாளையம் அழைத்தால் ஓடோடி வந்து சந்திக்கிறேன். இந்த ஆலச்சம்பாளையத்தில் என்னுடைய பாதம் படாத இடமே கிடையாது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் எனக்கு தெரியும். என்னால் முடிந்த நன்மைகளை இந்த பகுதிக்கு செய்து கொடுத்துள்ளேன். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் சரி, அமைச்சராக இருந்தபோதும் சரி, உங்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் சரி எடப்பாடி தொகுதியில் பல்வேறு நன்மைகள் செய்து கொடுத்துள்ளேன்.


    ஆனால் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டு மொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்ததாலும் போதை பொருள் விற்பனை. இளைஞர்கள், மாணவர்கள் இந்த போதை பொருளுக்கு அடிமையாகி கஞ்சா பயன்படுத்துவது அதிகமாகி இன்றைக்கு கெட்டுபோகின்ற சூழ்நிலையில் அவர்களுடைய வாழக்கையை சீரழிந்து போகின்ற நிலையை இந்த ஆட்சியில் தான் பார்க்க முடிகிறது. பலமுறை நான் அரசாங்கத்திடம் எடுத்து சொல்லி இருக்கின்றேன். சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றேன். ஆனால் இந்த அரசால் இதை தடுக்க முடியாமல் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கிடைக்கின்றது.

    தமிழகத்தல் எவ்வளோ பிரச்சனை இருக்கிறது. அதையொல்லாம் சரி செய்ய இந்த அரசாங்கத்திற்கு மனமில்லை.

    நீங்கள் எத்தனை கார் பேர் வைத்து இருக்கிறீர்கள். கார் பந்தயம் தமிழ்நாடுக்கு தேவையா? பந்தயத்திற்காக ஏற்கனவே அம்மா இருக்கின்றபோது இருங்காட்டுகோட்டையில் பிரமாண்டமாக கார் பந்தயம் நடத்துவதற்கு ஒரு மைதானம் அமைத்து கொடுத்து இருக்கிறோம். அங்கு கார் பந்தயம் நடத்தலாம். அதைவிட்டு விட்டு ஏழை, எளிய மக்கள் வரி பணத்தில் சுமார் 42 கோடி ரூபாய் செலவில் இன்று மாநகரத்தில் மைய பகுதியில் மருத்துவமனை, ரெயில் நிலையம், தலைமை செயலகம் இருக்கின்ற இடத்தின் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கார் பந்தயம் நடத்த வேண்டுமா?. இது அவசியமா? சிந்தித்து பாருங்கள். எப்படியெல்லாம் மக்களுடைய வரிபணம் வீணடிக்கப்படுகிறது. மக்களுக்கு அடிப்படை தேவைகள் நிறைய இருக்கிறது அதற்கு இந்த பணத்தை செலவிடலாம். அதை விடுத்து விட்டு கார் பந்தயம் நடத்துவதற்கு தி.மு.க. அரசின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை விளையாட்டாக செய்து கொண்டிருக்கிறார். இது வேதனை அளிக்கின்றது.

    மக்களுடைய பணம் மக்களுக்கு சென்றடைய வேண்டும். அதுதான் ஒரு நிர்வாக திறமையுள்ள அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டு.

    தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது. விசைத்தறிதொழில் நலிவடைந்து விட்டது. இந்த விசைத்தறி தொழிலுக்கு தேவையான நிதி ஒதுக்கி மீண்டும் அந்த தொழில் சீரடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அரிசி விலையும் உயர்ந்து விட்டது. ஒரு கிலோ அரிசி ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இப்படி அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. இதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மசோதா அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.
    • மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

    பாராளுமன்றம் இன்று கூடியதும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்.

    இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது.

    அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.

    முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடமிருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது.

    அதுமட்டுமின்றி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் அதனை நிர்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல.

    வக்பு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

    ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×