search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழும்பூர் மியூசியம்"

    • நாட்டுப்புற கலை மற்றும் இசை பாதுகாக்கும் காட்சியகங்கள் உள்ளது.
    • பழங்கால உலோகவியல், நாணயவியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு காட்சியகங்கள் பொதுமக்களை கவருகின்றன.

    சென்னை:

    சென்னையில் பழமை வாய்ந்த எழும்பூர் அருங்காட்சியக பழங்கால கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    சென்னை எழும்பூரில் பாந்தியன் சாலையில் பழமை வாய்ந்த அருங்காட்சியகம் (மியூசியம்) அமைந்து உள்ளது. இந்தியாவின் 2-வது பழமையான அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கிறது. 1851- ம் ஆண்டில் எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது ஆகும்.

    இந்த அருங்காட்சியகத்தில் தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல் சிற்பவியல் அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. 16 ஏக்கர் நிலப்பரப்பில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

    இதன் வளாகத்தில் 46 காட்சியகங்கள் கொண்ட 6 கட்டிடங்கள் உள்ளன. தலைமைக் கட்டடத்தின் கீழ்தளத்தில் சிற்பங்கள், இந்து சிற்பங்கள், அமராவதி, சமணம், பொது விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், பொது நிலவியல் போன்ற 13 காட்சிக்கூடங்கள் உள்ளன.

    பழங்கால கலைப்பொருட்கள், கல் சிற்பங்கள், தாவரவியல் காட்சியகங்கள், பட தொகுப்புகள் ஆகியவைகள் பிரமிக்க வைக்கின்றன. மேலும் நாட்டுப்புற கலை மற்றும் இசை பாதுகாக்கும் காட்சியகங்கள் உள்ளது. பழங்கால உலோகவியல், நாணயவியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு காட்சியகங்கள் பொதுமக்களை கவருகின்றன.

    குழந்தைகளின் காட்சி கூடத்தில், குழந்தைகள் பிரிவு, தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானக் கலைகள் ஆகியவை உள்ளன. தேசிய கலைக்கூடத்தில் சிறப்பான ஓவியங்கள், கலை சிறப்பம்சங்கள் உள்ளன.சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

    மின்னணு தொழில் நுட்பத்தில் மின்னணு தொடுதிரை, முப்பரிமாண தோற்ற அமைப்பு, செயலி உள்ளிட்டவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகம் தினமும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆதிகாலம் முதல் தற்போது வரை அனைத்தும் பார்வையாளர்கள் எளிதில் கற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    பெண் யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவை பார்வையாளர்களை மிகவும் வியக்க செய்கிறது. டைனோசர் போன்ற எலும்புக்கூடு பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது.

    பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் அருங்காட்சியகத்தை பார்க்க வசதி உள்ளது. மேலும் இங்கு பதிவு கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும், பள்ளி குழந்தைகளுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டவருக்கு 250 ரூபாயும், வெளிநாட்டு குழந்தைகளுக்கு 150 ரூபாயும், வெளிநாட்டு பள்ளி குழந்தைகளுக்கு 75 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தின் வளாகத்தில் கண்காட்சி கூடத்தின் பழமையான கட்டிடங்கள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. வெயில் மழையால் பாதிக்கப்பட்ட பழமையான மேற்கூரை ஓடுகள் மாற்றி அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

    மேலும் பழமையான அருங்காட்சியக ஆடிட்டோரியம் (மியூசியம் தியேட்டர்) சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு சேதமடைந்த தரைகள், மற்றும் இருக்கைகள் புதுப்பிக்கப்படுகின்றன. புதியதாக வர்ணம் பூசும் பணிகளும் நடந்து வருகின்றன .இன்னும் ஒரு சில மாதங்கள் வரை இப்பணிகள் நடைபெற உள்ளன.

    • கோடை விடுமுறையையொட்டி எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குவிந்து வருகிறார்கள்.
    • பெண் யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவற்றை மிகவும் வியப்பாக உள்ளது

    சென்னை:

    கோடை விடுமுறையையொட்டி எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குவிந்து வருகிறார்கள்.

    சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் பழமைவாய்ந்த ஆங்கிலேயர் ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் (மியூசியம்) செயல்பட்டு வருகிறது.

    இந்தியாவின் 2-வது பழமையான அருங்காட்சியகமாக திகழ்ந்து வருகிறது. 1851-ம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது ஆகும்.கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகம் முதல் இடத்தில் உள்ளது. கலை, தொல்லியல், மானுடவியல், நுண்ணுயிரியல் இன்னும் பல தலைசிறந்த களஞ்சியமான சென்னை அருங்காட்சியகம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    இங்கு நமது முன்னோர்களின்வாழ்வியல்,தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

    46 காட்சியகங்கள் கொண்ட 6 கட்டடங்கள் உள்ளன. தலைமைக் கட்டடத்தின் கீழ்தளத்தில் சிற்பங்கள்,பழங்கால கல்சிலைகள்,விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் பற்றிய காட்சிக்கூடங்கள் உள்ளன.

    பெண் யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவற்றை மிகவும் வியப்பாக உள்ளது. மேலும் டைனோசர் போன்ற எலும்புக்கூடு பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது. தினமும் காலை 9-30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. பெரியவர்களுக்கு ரூ.15,சிறுவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை தினமாகும்.தற்போது கோடை விடுமுறையை யொட்டி அருங்காட்சியகத்தை பார்வையிட ஏராளமான பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள், மாணவர்கள்,வெளியூர் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகிறார்கள்.

    அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பான விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்.மூலம் ஆராய்ச்சி மாணவர்கள் அருங்காட்சியத்தில் உள்ள பொருட்களைப் பற்றி எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

    அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் பெரிய டிஜிட்டல் எல்.இ.டி, மூலம் விரிவாக பார்வையாளர்களுக்கு விளக்கம் செய்தும்காண்பிக்கப்படுகிறது.

    இதன் மூலம் அருங்காட்சியகம் பற்றிய முழு விபரங்கள், தகவல்கள் எளிதில் பார்வையாளர்கள் மனதில் பதிவாகிறது.

    ×