search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் மோசடி"

    விவசாயி பேரில் கடன் மோசடி செய்த புகாரில் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மீது உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மேலூர்:

    கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் கடன் பெற்று வருகின்றனர்.

    குருவார்பட்டியைச் சேர்ந்த மாயழகு என்ற விவசாயி வங்கியில் ரூ.45 ஆயிரத்து 620 கடன் பெற்றதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாயழகு, தான் கடன் எதுவும் பெறவில்லை என தெரிவித்தார். மேலும் தனது பெயரில் மோசடியாக கடன் பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவித்தார்.

    இது குறித்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    அதன் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி விசாரணை நடத்தினார். கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் ராமசாமி, உறுப்பினர் சின்னகண்ணு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    வங்கி அதிகாரிகள் உடந்தையுடன் பருப்பு மில் அதிபர்கள் கடன் பெற்று மோசடி செய்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.#Loancheating

    விருதுநகர்:

    விருதுநகரை சேர்ந்தவர்கள் வேல்முருகன் (வயது 65), செண்பகன் (55). இவர்கள் அதே பகுதியில் பருப்பு மில் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்கள் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் ஆயுள் காப்பீடு செய்வதாக கூறி பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும் அவர்களின் ஆதார், முகவரி சான்றிதழையும் பெற்று உள்ளனர்.

    இதனை பயன்படுத்தி தொழிலாளர்கள் பெயரில் தேனி மாவட்டம், தென் கரையில் உள்ள அரசுடை மையாக்கப்பட்ட வங்கியில் பல கோடி பணத்தை வேல்முருகனும், செண்பகனும் கடனாக பெற்று உள்ளனர். இதற்கு அந்த வங்கியின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தாக தெரிகிறது.

    இதற்கிடையில் மில்லில் வேலை பார்க்கும் சில தொழிலாளர்களுக்கு தென்கரை வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் வங்கியில் வாங்கிய லட்சக்கணக்கான கடனுக்கு உரிய வட்டி அல்லது அசலை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இதுகுறித்து விசாரணை செய்தபோது மில் அதிபர்கள் தங்கள் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றது தெரியவந்தது.

    இதுகுறித்த அவர்கள் தென்கரை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மில் அதிபர்கள் வேல்முருகன், செண்பகன் மற்றும் உடந்தையாக இருந்த கலைச்செல்வி, சோலைராஜ், சன்னாசி ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் கடன் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்த வங்கி அதிகாரிகளுக்கு தென்கரை போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராக வில்லை.

    இந்த நிலையில் தென்கரை அரசு வங்கி மேலாளர், ஊழியர்கள் என 5 பேர் இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த கோர்ட்டு முன்ஜாமீன் தொடர்பாக தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வருகிற 19-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    மில் அதிபர்கள் 2 பேரும் தொழிலாளர்களின் ஆவணங்கள் மூலம் தென்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அரசு வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் பெற்று மோசடி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து வங்கி அதிகாரி கூறுகையில், வங்கி வாராக்கடன் மற்றும் கடன் மோசடியை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாக ஒரு வங்கிக் கிளையில் ரூ. 25 கோடி முதல் ரூ.50 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக தெரியவந்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்றார்.

    இதன்அடிப்படையில் விருதுநகர் மில் அதிபர்கள் பல கோடி மோசடி செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. #Loancheating

    இந்திய வங்கிகளில் 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவை மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. #Mallyaarrestordered #VijayMallya
    மும்பை:

    இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது வாரண்டுகளும், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. 

    இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மல்லையாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 

    தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 

    இந்நிலையில், கடந்த 2005-10-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6,027 கோடி ரூபாயை கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக இந்திய வங்கிகள் குழுமம் சார்பில் மும்பையில் உள்ள சிறப்பு நீதி மன்றத்தில் பொருளாதாரத்துறை அமலாக்க அதிகாரிகள் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்கு சிறப்பு நீதிபதி எம்.எஸ். ஆஸ்மி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைட்டட் பிரிவரீஸ் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிக்கு இவ்வழக்கில் சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம், விஜய் மல்லையாவை கைது செய்ய ஜாமினில் வெளிவர முடியாத உத்தரவையும் பிறப்பித்துடன், மறுவிசாரணையை ஜூலை மாதம் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. #Mallyaarrestordered #VijayMallya 
    ×