search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுண்டம் பாளையம் தொண்டர் பலி"

    கோவை கவுண்டம் பாளையம் அருகே கருணாநிதியின் இறுதி சடங்கை டிவியில் பார்த்த திமுக பிரமுகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.#RIPKarunanidhi #Karunanidhi #DMK
    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம் பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் சிவலிங்கம் (64). இவர் கோவை மாநகராட்சி 5-வது வட்ட தி.மு.க. துணை செயலாளராக இருந்து வந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டதில் இருந்து சிவலிங்கம் மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கருணாநிதி மரணம் அடைந்த செய்தி கேட்டு மேலும் வருத்தம் அடைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கு மெரினா பீச்சில் நடைபெற்றதை தி.மு.க. பிரமுகர் சிவலிங்கம் டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தார்.

    திடீரென அவர் வீட்டில் மயங்கி விழுந்தார்.

    அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிவலிங்கத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவலிங்கத்துக்கு கவுசல்யா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ×