search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்கால் சிலை கொள்ளை"

    காரைக்காலில் கோவில் சிலை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

    காரைக்கால்:

    காரைக்கால் ரெயில்வே நிலையம் அருகில் உள்ள கீழ வெளி ராஜுவ்காந்தி நகரில் கன்னியாகுறிச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை இரவு கோவில் நிர்வாகக்குழு தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் ஊர்க்காரர்கள் பூட்டிவிட்டு சென்றனர்.

    வழக்கம் போல் கோவிலை திறக்க சென்ற போது, கோவில்கதவின் பூட்டு உடைத்து திறக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது, ரூ.70 ஆயிரம் மதிப்பிலான அம்மன்சிலை திருட்டுப்போனது தெரிவந்தது. மேலும், கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து, ராஜமாணிக்கம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி, போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் சிலை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    ×