என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கிறிஸ்டல் டவர்
நீங்கள் தேடியது "கிறிஸ்டல் டவர்"
மும்பை பரேல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர். #MumbaiFire #CrystalTowerFire
மும்பை:
மும்பை பரேலில் உள்ள கிறிஸ்டல் டவர், அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் நேற்று முன்தினம் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
17 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்திற்கு மாநகராட்சியிடம் இருந்து பெற வேண்டிய அனுமதி சான்றிதழ்களை பெறாமல் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலா என்பவர் வீடு வாங்கிய 58 குடும்பத்தினரை குடியமர்த்தி இருக்கிறார்.
இதுபற்றி அறிந்த மாநகராட்சி நிர்வாகம் 2016-ம் ஆண்டே குடியிருப்புவாசிகளை வெளியேற்றகோரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஆனால் குடியிருப்புவாசிகள் கட்டிடத்தில் இருந்து காலி செய்யப்படவில்லை. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 4 பேரின் உயிரை பலி வாங்கி விட்டது. தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர்.
நேற்று அவரை போய்வாடா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 27-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். #MumbaiFire #CrystalTowerFire
மும்பை பரேலில் உள்ள கிறிஸ்டல் டவர், அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் நேற்று முன்தினம் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானார்கள். கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
17 மாடிகளை கொண்ட அந்த கட்டிடத்திற்கு மாநகராட்சியிடம் இருந்து பெற வேண்டிய அனுமதி சான்றிதழ்களை பெறாமல் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலா என்பவர் வீடு வாங்கிய 58 குடும்பத்தினரை குடியமர்த்தி இருக்கிறார்.
இதுபற்றி அறிந்த மாநகராட்சி நிர்வாகம் 2016-ம் ஆண்டே குடியிருப்புவாசிகளை வெளியேற்றகோரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஆனால் குடியிருப்புவாசிகள் கட்டிடத்தில் இருந்து காலி செய்யப்படவில்லை. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் அந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 4 பேரின் உயிரை பலி வாங்கி விட்டது. தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர்.
நேற்று அவரை போய்வாடா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை வருகிற 27-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். #MumbaiFire #CrystalTowerFire
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X