என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பேரணி"
மதுரை:
தென் மண்டல தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில், நியாய விலைக்கடை விற்பனையாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று பேரணி நடத்தப்பட்டது.
மாநில பொதுச் செயலாளர் முத்துபாண்டியன் தலைமை தாங்கினார். தென் மண்டல தலைவர் பாண்டியன், செயலாளர் ஆசிரியதேவன் முன்னிலை வகித்தனர்.
மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. இதில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பணியாளர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது.
நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்க வேண்டும். ஊதியத்தை மாதந்தோறும் அரசே நேரடியாக வழங்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் விற்பனையாளர்கள், சங்கப்பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
நியாயவிலை கடைகளை ஆய்வு என்ற பெயரில் பல்வேறு துறை அதிகாரிகள் மாமூல் பெற்று வருவது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்