என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொடைக்கானல் சிறுத்தை"
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி மற்றும் பல்வேறு மலைகிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி வன விலங்குகள் இடம் பெயர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன.
மேலும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனத்துறையினர் அடிக்கடி பார்வையிட்டு வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாண்டிக்குடி அருகே உள்ள பட்டலாங்காடு என்ற பகுதியில் அதிகாலையில் தோட்ட வேலைக்கு சென்றவர்கள் கரடி நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர். அதிகாலையில் வனப்பகுதியை கடந்து கரடி சென்றதால் இரவு நேரத்தில் பசிக்காக தோட்டத்தில் புகுந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
இதே போல நேற்று பெருங்கானல் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாடியதைப்பார்த்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு முகாமிட்டு வன விலங்குகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வன விலங்குகள் இடம் பெயர்ந்து தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வருவது விவசாயிகளை பீதியடைய வைத்துள்ளது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்