என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கோவை சரவணம்பட்டி
நீங்கள் தேடியது "கோவை சரவணம்பட்டி"
கோவை சரவணம்பட்டி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:
கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் பஸ் நிறுத்தம் அருகே 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சரவணம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை பிடித்து அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்த சித்து (வயது 25), கரூரை சேர்ந்த ராஜ்குமார் (23) ஆகியோர் என்பதும் அவர்கள் தனியார் கம்பெனியில் வேலை செய்த நேரம் போக மற்ற நேரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X