என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சாத்தான்குளம் கொள்ளை"
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி ஆல்வின் விமலா. இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் அமெரிக்காவிலும், இன்னொரு மகள் சென்னையிலும் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜெய ராஜும், அவரது மனைவியும் கடந்த 11-ந்தேதி சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று அவர்கள் ஊர் திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே பீரோவில் ½ பவுன் தங்க கம்மல், ரூ.2 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுபற்றி தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட் டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்