search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கைப்பந்து போட்டி"

    சென்னையில் 25 கல்லூரிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    சென்னை:

    குமாரராணி மீனா முத்தையா கல்லூரி சார்பில் 13-வது எம்.ஏ.எம். முத்தையா குமாரராஜா நினைவு தங்க கோப்பைக்கான கல்லூரிகள் இடையிலான கைப்பந்து, கோ-கோ, போட்டிகள் சென்னையில் நடத்தப்படுகிறது.

    தேசிய அளவிலான கைப்பந்து (ஆண்கள்), மாநில அளவிலான கோ-கோ (இருபாலர்) போட்டிகள் அடையாறில் அந்த கல்லூரி மைதானத்தில் நாளை (19-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம்., லயோலா, செயிண்ட் ஜோசப் (கேரளா), ஜெயின் பல்கலைக்கழகம் (பெங்களூர்) உள்பட 25 அணிகளும், கோ-கோ ஆண்கள் பிரிவில் 22 கல்லூரிகளும், பெண்கள் பிரிவில் 23 அணிகளும் பங்கேற்கின்றன. நாக்அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1 லட்சம் ஆகும். மேற்கண்ட தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளரும், குமாரராணி மீனா முத்தையா கல்லூரி உடற்கல்வி இயக்குனருமான ஏ.பீட்டர் மரியா அந்தோணி தெரிவித்துள்ளார். #tamilnews
    ×